Thursday, December 17, 2009

Simbu with K.V.Anand in Tamil.


‘அயன்’ படத்துக்கு பின் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு.சிம்பு, த்ரிஷா நடிப்பில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை தயாரித்து வருகிறது ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம். இதே நிறுவனம் அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.

இதை ஆனந்த் இயக்குகிறார். படத்துக்கு ‘கோ’ என தலைப்பிட்டுள்ளனர். அரசன் என பொருள்படும் வகையில் படத்துக்கு ‘கோ’ என தலைப்பு வைத்திருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

அதற்கான தேர்வு நடக்கிறது. சுபாவுடன் இணைந்து இப்படத்துக்கான கதை, திரைக்கதையை ஆனந்த் எழுதியுள்ளார். படத்தின் இசை அமைப்பு பணிக¢காக ஹாரிஸ் ஜெயராஜுடன் சீனாவுக்கு செல்கிறார் ஆனந்த். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது.

No comments:

Post a Comment