Friday, June 4, 2010

Lyrics Dedicated to VTv.


''விண்ணைத்தாண்டி வருவாயா '' வந்துவிடு


A Lyrical Feast for the fans of Thalaivan Silambarasan and of the movie Vinnaithaandi Varuvaaya.

Writer : Jenoshan



''விண்ணைத்தாண்டி வருவாயா '' வந்துவிடு
உன்னை கண்டவுடன் புதிதாய் ஒரு மாற்றம்
முடிந்து போனது என நினைத்த ஒரு
கவிதை முற்றுப்புள்ளி வைக்கப்படாமல்
இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்

பல ஆண்களின் கவிதைத்தொகுதிகள்
உனக்கு சொந்தமானதாக இருக்கலாம்
ஆனால் என் இதயத்தில் வேலாய்
பாய்ந்த உன் கூரான
விழிகள் ஏற்படுத்திய காயங்களும்
உனக்குத்தான் சொந்தம்

பல வருடங்களாக உன்னை பார்த்து
அவஸ்தைப்பட்டு எழுதிய கவிதைகளைவிட
பல நாள் கழித்து உன்னை பார்த்த
அந்த நொடி இனிமையாய் இருக்கிறது

என் வாழ்வில் நீ
வைரமுத்துவின் முழு நீள காதல் காவியம்
பல நாள் கழித்து அம்மாவின் அன்பு
முத்தம்
நான் தேடித்திரிந்த தேவதை
பல லட்சம் வண்ணத்துப்பூச்சிகளின் சங்கம்

இசைஞானியின் இடைக்கால கீதம்
மழை நாள் இரவில் நெடுந்துார ஜன்னல்
பயணம்
உண்மை நண்பனின் பிறந்தநாள் பரிசு
தனியே நெடுஞ்சாலையில் முணுமுணுக்கும்
காதல் பாடல்

ஏ.ஆர் ரகுமானின் தமிழ்ப்பாடல்
உண்மை காதலர்கள் பல நாள் பிரிவின்
பின் சந்தித்த நொடிப்பொழுது
ரோஜா செடியின் முட்களை மறைத்து
வாசத்தை காட்டிய என்னவளே

மொத்தத்தில் நீ கௌதம் வாசுதேவ்
மேனன் இயக்கிய'' மின்னலே' ' ''பச்சைக்கிளி
முத்துச்சரமாய்'' இருக்க ''வாரணம் ஆயிரம்'' புடைசூழ ''விண்ணைத்தாண்டி வருவாயா'


--ஜெனோஷன்

An awesome presentation of Lyric for the movie Vinnaithaandi Varuvaaya by Jenoshan from Srilankan Simbu Fan Club of Simbucentral.

No comments:

Post a Comment